சாலை தடுப்பில் மோதிய பஸ் தீக்கிரை: பயணிகள் மூவர் உயிர் ஊசல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சாலை சாலை தடுப்பில் தனியார் பஸ் மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பஸ்சில் பயணித்த பயணிகள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிந்தாமணி நகரில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று மதியம் வந்து கொண்டிருந்தது. லட்சுமிவெங்கடேஷ்வரா டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பஸ் பெங்களூரு நகரின் கே.ஆர்.புரம் பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதியது. குறுக்கே வந்த பைக்கில் மோதாமல் இருக்க பஸ் டிரைவர் முயன்று திருப்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

Bengaluru: Private bus catches fire, 3 passengers injured

மோதிய வேகத்தில் பஸ்சின் டீசல் டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் பஸ் முழுவதிலும் தீ மளமளவென பரவியது. பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடினர். சிலர் ஜன்னல்கள் வழியாக கீழே குதித்து தப்பினர்.

தள்ளுமுள்ளு, தீ போன்றவற்றுக்குள் சிக்கி 4 பயணிகள் படுகாயமடைந்தனர். அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கேஆர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+