மும்பையின் அடுத்த 'வால்டேர் வெற்றிவேல்' யார்?.. அதுக்கும் சூதாட்டம்!.. ரூ. 2000 கோடிக்கு!!
மும்பை: மும்பையில் எதற்கெடுத்தாலும் பெட்தான். கிரிக்கெட் தாண்டி பல விஷயங்களிலும் மும்பையில் சூதாட்டம் நடந்து வரும் நிலையில் மும்பை போலீஸ் கமிஷனராக அடுத்து யார் பதவியேற்பார்கள் என்பதற்கும் பெட் வைத்து வருகின்றனராம் சூதாட்டக்காரர்கள்.
கிட்டத்தட்ட ரூ. 2000 கோடி அளவுக்கு இதில் பணம் புழங்குவதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெட்டிங் பார்ட்டிகளைப் பிடிக்கும் காவல்துறையின் அடுத்த கமிஷனர் யார் என்பதையே பெட்டிங்கில் கொண்டு வந்து விட்டது காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை கமிஷனராக இருந்த சத்யபால் சிங் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு போய் விட்ட நிலையி்ல் புதிய கமிஷனர் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளார். இதையடு்ததே பெட்டிங் களை கட்டியுள்ளது.

அரசியலில் குதித்த சத்யபால் சிங்
கமிஷனர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சத்யபால் சிங் உ.பி மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதற்காகவே அவர் காவல்துறைப் பணியிலிருந்து போய் விட்டார்.

அடுத்த கமிஷனர் யார்
இதையடுத்து யாரை புதிய கமிஷனராகப் போடுவது என்ற ஆலோசனை நடந்து வருகிறது.

ஐந்து பேரின் பெயர்கள் பரிசீலனை
இந்தப் பட்டியலில் ஏடிஜிபி ஜாவேத் அக்தர், தீவிரவாத தடுப்புப் பிரிவு கமிஷனர் ராகேஷ் மரியா, விஜய் காம்ப்ளே, தானே போலீஸ் கமிஷனர் ரகுவன்ஷி, சிறைத்துறை கூடுதல் டிஜிபி மீரா போர்வன்கர் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா...
இதையடுத்து இவர்களில் யார் அடுத்த போலீஸ் கமிஷனர் என்பதை பெட்டிங்கில் கொண்டு வந்து விட்டனர் புக்கிகள். இதற்கு நல்ல கிராக்கியும், வரவேற்பும் ஏற்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட ரூ. 2000 கோடிக்கு மேல் பணம் புழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
யார் எப்படியோ.. ஆனால் ராகேஷ் மரியாதான் அடுத்த கமிஷனர் என்று பேச்சு பலமாக அடிபடுகிறது. இவர் சற்று அதிரடியானவர். இவர் கமிஷனராக வந்தால், நிச்சயம் தன்னை வைத்து சூதாடிய புக்கிகளுக்கு ஆப்பு வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications