ம.பி.: இணை அமைச்சர் பதவியை நிராகரித்த சாமியார் பையூஜி மகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மத்திய பிரதேசத்தில் இந்து சாமியார் பையூஜி மகாராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

துப்பாக்கியால் சுட்டு சாமியார் பையூஜி மகாராஜ் தற்கொலை- வீடியோ
போபால்: மத்திய பிரதேச அரசு அறிவித்த இணை அமைச்சர் பதவியை நிராகரித்த இந்து சாமியார் பையூஜி மகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்து சாமியார்கள் 5 பேரை திடீரென இணை அமைச்சராக்கினார். இவர்களில் ஒருவர் பையூஜி மகாராஜ்.

ஆனால் தமக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என நிராகரித்துவிட்டார். சாமியார் பையூஜி மகாராஜூக்கு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் ஏராளமான சீடர்கள் உள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் துப்பாக்கியால் சுட்டு பையூஜி மகாராஜ் இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications