முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் மரணம்.. ராஜீவ் காந்தியை எச்சரித்தவர்!
டெல்லி: முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் தனது 85வது வயதில் மரணமடைந்தார். ராஜீவ் காந்தி தமிழகத்திற்கு வரக் கூடாது, வந்தால் கொலை செய்ய்படுவார் என்று எச்சரிக்கை விடுத்தவர் பீஷ்ம நாராயண் சிங் என்பது நினைவிருக்கலாம்.
1989ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர் பீஷ்ம நாராயண் சிங். அ்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆளுநரராக இருந்த பர்னாலா திமுக ஆட்சியைக் கலைக்க பரிந்துரை கடிதம் அனுப்ப முடியாது என்று மறுத்திருந்தார். ஆனால் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்தார். இதனால் அதிருப்தி அடைந்த பர்னாலா பதவி விலகினார். அந்த இடத்திற்கு வந்தவர்தான் இந்த சிங்.

தனது பதவிக்காலத்தின்போது ராஜீவ் காந்திக்கு தமிழகத்தில் ஆபத்து இருக்கிறது. அவர் தமிழகம் வருவதைத் தவிர்க்க வேண்டும். வந்தால் கொலை செய்யப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்தவர் பீஷ்ம நாராயண் சிங். இவரது பதவிக்காலத்தின்போது சர்ச்சைகளிலும் இவர் சிக்கத் தவறவில்லை.
பதவி ஓய்வுக்குப் பின் டெல்லியில் போய் செட்டிலானார் பீஷ்ம நாராயண் சிங். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் நீண்ட காலமாக உடல் நலன் பாதிக்கப்பட்ட நிலையில் நோய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு வயது 85.
இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். தமிழ்நாடு தவிர அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications