வந்தே பாரத் ரயிலை இடைவிடாது பதம் பார்க்கும் மாடுகள்! போபால் ரயில் நிலையத்தில் ஷாக் சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

போபால்: வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தியது முதலே மாடுகள் மோதுவதும் அதன் முன்பகுதி சேதமடைவதும் தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகின்றன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி , வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து வருகிறார். இந்த ரயில் சேவை தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

Bhopal Vande Bharat Express hits cow in Gwalior

அதேநேரத்தில் ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில் மீது மாடுகள் முட்டுவதும் முன்பகுதி சேதமடைதலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர் நிகழ்வாகி வருகிறது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெல்லி நிஜாமுதீன்-மபி ராணி கமலாபதி வந்தே பாரத் ரயில் சேவையை அண்மையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்த ரயில்சேவை நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயிலாகும். மொத்தம் 708 கி.மீ தொலைவை 7.45 மணிநேரத்தில் சென்றடையக் கூடியது மபி- டெல்லி வந்தே பாரத் ரயில். அப்போது, ஏப்ரல் 1-ந் தேதி திறக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் சேவை மூலம் நாட்டு மக்களை முட்டாளாக்குகிறாரா? பிரதமர் மோடி எனவும் காங்கிரஸ் கட்சியினர் கிண்டலடித்தனர்.

Bhopal Vande Bharat Express hits cow in Gwalior

போபாலில் இருந்து புறப்படக் கூடிய 20172 வந்தே பாரத் ரயில் குவாலியரின் தாத்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மாடு ஒன்று ரயில் முன்பகுதியில் டமாரென மோதியது. பின்னர் ரயில் பிளாட்பாரத்திலேயே சுமார் 15 நிமிடங்கள் நின்றது. மாடு அங்கிருந்து நகர்ந்த பின் ரயிலின் முன்பகுதியில் ஏற்பட்ட சேதம் கண்டறியப்பட்டது. ரயிலின் முன்பகுதி சேதம் சரி செய்யப்பட்ட பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+