பீகார் ரிசல்ட்... மோடி, அமித்ஷாவின் அகம்பாவம் அழிந்தது.... கொண்டாடும் கேஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கான வாக்கெடுப்புதான் பீகார் தேர்தல் முடிவுகள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்தவர் கேஜ்ரிவால். வாக்காளர்கள் நிதிஷ்குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது தேர்தலில் வென்றுள்ள நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கேஜ்ரிவால். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கேஜ்ரிவால் கூறியதாவது:

Bihar outcome a referendum on Modi: Kejriwal

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதுதான் பீகார் தேர்தல் முடிவுகள். பாரதிய ஜனதாவின் வெறுப்பு அரசியலை பீகார் மக்கள் நிராகரித்துவிட்டனர்.

பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் அகம்பாவத்துக்கு விழுந்த அடி இது. பிரதமர் மோடி நாடு நாடாக போவதை நிறுத்திவிட்டு இந்தியாவில் வேலை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளனர் பீகார் மக்கள்.

இனியாவது டெல்லி அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு குறுக்கிடாமல் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+