பாலியல் புகாரில் கைதான கேரள பிஷப் பிராங்கோவுக்கு 24ஆம் தேதி வரை போலீஸ் கஸ்டடி!
கன்னியாஸ்திரியின் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிஷப் பிரோங்கோ திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரியின் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிஷப் பிரோங்கோவுக்கு 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பலமுறை பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி புகார் கூறியிருந்தார்.

10 நாட்கள் விசாரணை
இதைத்தொடர்ந்து பிஷப்பை பதவி நீக்கக்கோரி திருவனந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த 10 நாட்களாக பிஷப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

வாடிகன் சபை அதிரடி
பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று முன்தினம் அறிவித்தது. இதற்கிடையே, தொடர்ந்து நேற்றும் பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பிஷப் பிராங்கோ கைது
விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
|
திடீர் நெஞ்சுவலி
செல்லும் வழியில் பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

24ஆம் தேதி வரை காவல்
இதையடுத்து கோட்டயம் நீதிமன்றத்தில் பிஷப் முலக்கல் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 24ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம் 24ம் தேதி பிற்பகல் மீண்டும் அவரை கோர்டடில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications