ஒரு ராணுவ வீரரை கொன்றால் பாகிஸ்தானின் 10 ராணுவ வீரர்களை பலி எடுக்க வேண்டும்: சொல்வது சிவசேனா
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாட்டின் ஒரு ராணுவ வீரரை கொன்றால் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்களை பலி எடுக்க வேண்டும் என்று சிவசேனா எச்சரித்துள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவ்த் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானுடன் நட்பு பாரட்டுவதை எப்போதும் சிவசேனா எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும. அவர்களுடன் எந்த விதமான பேச்சும் நடத்த கூடாது.
பாகிஸ்தான் ராணுவத்தினர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இந்திய நாட்டின் ஒரு ராணுவ வீரரை அவர்கள் கொன்றால், பாகிஸ்தானின் 10 ராணுவ வீரர்களை கொன்று பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்க அந்த மொழிதான் புரியும்.
இவ்வாறு ராவத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications