வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடுகிறார் துஷார் வெல்லப்பள்ளி!
Recommended Video
டெல்லி: வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து கூட்டணி கட்சி வேட்பாளரான துஷார் வெல்லப்பள்ளியை பாஜக களமிறக்கியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவர் தனது தந்தையின் தொகுதியான அமேதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் ராகுல் தென்னிந்தியாவில் போட்டியிட வேண்டும் என அவர் கட்சியினர் விரும்பினர்.
அதன்படி அவர் தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் அவர் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
கேரள - தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி நிற்பதன் மூலம் தெற்கு மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்குகள் அதிகரிக்கும் என்று அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
I proudly announce Shri Thushar Vellappally, President of Bharat Dharma Jana Sena as NDA candidate from Wayanad.
— Chowkidar Amit Shah (@AmitShah) April 1, 2019
A vibrant and dynamic youth leader, he represents our commitment towards development and social justice. With him, NDA will emerge as Kerala's political alternative.
ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிபி சுனீர் போட்டியிட உள்ளார். மற்ற மாநிலங்களில் காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடும் நிலையில் கேரளாவில் மட்டும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.
பாஜக சார்பில் கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜனசேனா கட்சியின் தலைவர் துஷார் வெல்லப்பள்ளி போட்டியிடுவார் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.