பாஜக அரசின் கெடுபிடிக்கு பயந்து கம்பெனிகளை மூடும் சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா
டெல்லி: மத்தியிலும், மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அதிகாரத்தை பிடித்து வரும் நிலையில், நடவடிக்கைகளுக்கு பயந்து சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா தனது நான்கு நிறுவனங்களை முற்றிலும் மூடிவிட்டார்.
சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா. இவர் லைப்லைன் அக்ரோடெக், கிரீன்வேவ் அக்ரோ, ரைட்லைன் அக்ரிகல்சர், பிரைம்டைம் அக்ரோ, பியூச்சர் இன்ப்ரா அக்ரோ, பெஸ்ட் சீசன்ஸ் அக்ரோ ஆகிய ஆறு நிறுவனங்களை நடத்தி வந்தார். இதில் முதல் நான்கு நிறுவனங்களை வத்ரா திடீரென மூடியுள்ளார். அடுத்த இரு கம்பெனிகளின் பெயர்களை மாற்றியுள்ளார். மேலும், இவற்றையும் மூட தேவையான நடவடிக்கைகளை அவர் தொடங்கியுள்ளார்.

கடந்த மே மாதம் வரையில் அனைத்து நிறுவனங்களுமே ஆக்டிவாக இருந்த நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்த நிறுவனங்களை மூடும் வேலையில் வத்ரா இறங்கியுள்ளார். மத்திய கார்பொரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஆவணங்களின் மூலம் இந்த தகவல்கள் தற்போது மீடியாக்களுக்கு தெரியவந்துள்ளன.
2012ல் தொடங்கப்பட்ட மேற்கண்ட நிறுவனங்கள், ஆண்டு வருமான கணக்கையோ, பேலன்ஸ் ஷீட்டையோ இதுவரை தாக்கல் செய்ததே கிடையாதாம். இந்த ஆறு நிறுவனங்களிலும் ராபர்ட் வத்ராதான் மேலாண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள தனது நிலங்களையும் அவசரமாக ராபர்ட் வத்ரா விற்பனை செய்து வருகிறார். இவ்விரு மாநிலங்களும் காங்கிரஸ் வசம் இருந்து சமீபத்தில் பாஜக ஆட்சிக்கு மாறியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications