Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிவி செட் டாப் பாக்ஸ்களில் சிப் பொருத்தும் மத்திய அரசு.. மக்களை கண்காணிக்க புதிய திட்டம்!

பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியா முழுக்க டிவி செட் டாப் பாக்ஸ்களில் சிப் வைக்க முடிவெடுத்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியா முழுக்க டிவி செட் டாப் பாக்ஸ்களில் சிப் வைக்க முடிவெடுத்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளிப்படையாக கேபிள் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலமாக, இந்த திட்டம் அமல்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தம் 4 தனியார் நிறுவனங்களிடம் செய்யப்பட இருக்கிறது.

இந்த தனியார் நிறுவனங்கள்தான், மக்களின் விவரங்களை சேகரித்து அரசிடம் கொடுக்கும். இதற்கு பல தரப்பில் இருந்தும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

டிஆர்பி கிடையாது

டிஆர்பி கிடையாது

பொதுவாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் டிவி சேனல்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள், என்ன நிகழ்ச்சிகள் பார்க்கிறார்கள், எந்த சேனல் பிரபலமாகி இருக்கிறது என்பதை குறிக்கும் டிஆர்பி ரேட்டிங்கை ஒரே மாதிரியாகத்தான் கணக்கிடுகிறார்கள். குறிப்பிட்ட சில வீடுகளில் அவர்ககளின் அனுமதியடன் செட் டாப் பாக்ஸ் பொறுத்தி இதை கணக்கிடுவார்கள். பணக்கார , ஏழை என எல்லா விதமான வீடுகளிலும் இப்படி செய்வார்கள்.

அரசு

அரசு

ஆனால் அரசு செய்ய இருப்பது டிஆர்பி போன்றது கிடையாது. மத்திய அரசு தற்போது இந்தியாவில் டீவி பயன்படுத்தும் எல்லா வீடுகளிலும் சிப் வைக்கப்பட உள்ளது. இந்தியா முழுக்க, கேபிள் உரிமையாளர்கள் வீடுகளுக்கு செட் ஆப் பாக்ஸ் வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கிறது. இந்த செட் டாப் பாக்ஸ்களில் சிறிய சிப் ஒன்று பொறுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம்தான் மத்திய அரசு நம்மை கண்காணிக்கும்.

வேறுபாடு கிடையாது

வேறுபாடு கிடையாது

இதை வைத்து மத்திய அரசு நாம் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கிறோம், எதை விரும்புகிறோம் என்று தெரிந்துகொள்ளும். அதற்கு ஏற்றது போல அரசு தங்களை நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஆதார் மூலம் நம்முடைய பெரும்பாலான தகவல்கள் அரசிடம் இருக்கிறது. இப்போது, நம்முடைய தனிப்பட்ட விருப்பங்கள் மூலம் இன்னும் நம்மை பற்றிய அதிக தகவல்களை தெரிந்துகொள்ள உள்ளது.

எல்லோரும் எதிர்ப்பு

எல்லோரும் எதிர்ப்பு

இதற்கு பெரிய எதிர்ப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசு மறைமுகமாக வெளியிடாமல் வெளிப்படையாகவே வெளியிட்டு இருக்கிறது. இதற்கு சில செய்தி சேனல்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தற்போது மத்திய அரசு டிராய் அமைப்பிடம் இதற்கு அனுமதி கோரியுள்ளது. இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களுடன் போடப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+