Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛தீர்க்கத்தரிசி’’.. நிதிஷ் குமாரை வைத்து பாஜகவின் மெகாபிளான்.. முன்பே அலர்ட்டான மம்தா! பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கைகோர்ப்பார் என்பதை முன்கூட்டியே மம்தா பானர்ஜி தெரிந்து வைத்து அலர்ட்டாகி சாமர்த்தியமாக செயல்பட்ட விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த தேர்தல் நடக்கலாம். 2014, 2019ல் வெற்றி பெற்றது போல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெல்லும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால் பாஜகவை ஜெயிக்க விடக்கூடாது. வரும் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கின.

BJP had hatched a plan to get Nitish Kumar and Mamata Known this before sources close to Didi

இந்த கூட்டணியில் காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, முதல்வர் ஸ்டாலினின் திமுக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்பட 28 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில் தான் தற்போது ‛இந்தியா' கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சி பாகுபாடுகளை கடந்து எதிர்க்கட்சிகள் இணைந்ததை பார்த்து ஷாக்கான பாஜக தற்போதைய குழப்பத்தால் நிம்மதி அடைந்துள்ளது. குறிப்பாக ‛இந்தியா' கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்த நிதிஷ் குமார் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளார். மேலும் பீகாரில் லாலுவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறிக்கும் அவர் மீண்டும் பாஜகவுடன் இணைந்து ஆட்சியை பிடித்து முதல்வராக திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் தான் நிதிஷ் குமாரை வைத்து பாஜக போட்ட பிளான் தனக்கு முன்கூட்டியே தெரியும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதாவது குடியரசு தினத்தையொட்டி நேற்று மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் தேநீர் விருந்து வழங்கினார். இதில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதேபோல் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அப்போது டீ பார்ட்டி நடந்த இடத்தில் அனைவரின் பேச்சு என்பது பீகார் அரசியல் நிலவரம் குறித்தும், நிதிஷ் குமாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றியதாகவும் தான் இருந்தது. இந்த வேளையில் மம்தா பானர்ஜி தனதுக்கு நெருக்கமானவர்களிடம் முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். அப்போது தான் அவர் நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைவார் என்பது பற்றி தான் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கூறுகையில, ‛‛இந்தியா' கூட்டணியில் நிதிஷ் குமார் மீது மம்தா பானர்ஜிக்கு தொடக்கம் முதலே சந்தேகம் இருந்தது. ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் நியமனம் செய்யப்பட்ட பிறகு அவரை பாஜகவில் இணைக்க அந்த கட்சி திட்டமிட்டுள்ளது. இதனை முன்கூட்டியே மம்தா பானர்ஜி அறிந்தார். அதோடு நிதிஷ் குமாரை ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கு நியமனம் செய்ய மம்தா பானர்ஜி எதிர்த்தார்.

மம்தா பானர்ஜியின் எதிர்ப்பு மூலம் நிதிஷ் குமார் ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த கருத்தை அப்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சிவசேனா (யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். அதன்படி தற்போது நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளார்'' என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+