மணிப்பூரில் 10,000 அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் குவிப்பு- கொந்தளிக்கும் மக்கள்- பாஜகவும் எதிர்ப்பு!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்த 10,000 அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரை உடனே விலக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநில பாஜக தலைவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தி குக்கி, நாகா மற்றும் மைத்தேயி இனமக்கள் குறிப்பிடத்தக்குந்த எண்ணிக்கையில் உள்ளனர். குக்கி, நாகா இன மக்கள் பழங்குடிகள் பட்டியலில் உள்ளனர். இதே பட்டியலில் மைத்தேயி மக்களை சேர்க்கும் மாநில பாஜக அரசின் முயற்சிக்கு எதிராக குக்கி இனமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இப்போது வன்முறையாகவும் ஆயுதப் போராட்டமாகவும் திசைமாறிக் கொண்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் வன்முறைகளில் தற்போதுவரை 100 பேர் பலியாகிவிட்டனர். 30,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் குவிக்கப்பட்டனர். ஆனால் குக்கி ஆயுதக் குழுவினரோ, பாதுகாப்பு படையினரை தாக்கி அவர்களிடம் இருந்து நவீனரக ஆயுதங்களை கைப்பற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் அமைதியை நிலைநாட்டுவதில் முன்னேற்றம் காணவில்லை என்கிற அதிருப்தியும் மணிப்பூரில் நிலவுகிறது.
மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே ஆயுதப் படை சிறப்பு சட்டத்தின் மூலம் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் மக்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இதனாலேயே மணிப்பூர் பெண்கள், உலகை உலுக்கிய எங்களையும் பலாத்காரம் செய் என்கிற நிர்வாணப் போராட்டத்தை நடத்தி இருந்தனர். இதனால் எப்போதும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் மீது வடகிழக்கு மாநில மக்களுக்கு அதிருப்தியும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.

இப்பின்னணியில் தற்போது 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டிருப்பதை அம்மக்கள் ஏற்க மறுக்கின்றனர். அப்படையினரை உடனே மணிப்பூரில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரி மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தினர்.
இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து தற்போது மணிப்பூர் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர். மணிப்பூர் மாநில பாஜக தலைவர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். பிரதமர் மோடிக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications