போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ! உ.பி.யில் பரபரப்பு
உத்தரபிரதேசத்தில் ஊர்க்காவல் படைவீரர் ஒருவரை பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உ.பி.மாநிலத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களின் அட்டகாசம் தொடர்கிறது. ஒன்வேயில் செல்வதை தடுத்த ஊர்காவல் படை வீரரை பாஜக எம்.எல்.ஏ., ஒருவர், கன்னத்தில் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு, 3 மாதங்களுக்கு முன் பதவியேற்றது. அப்போது முதல் அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சோதனை சாவடி ஊழியர் ஒருவரை தாக்கினார். கோரக்பூர் பாஜக எம்.எல்.ஏ. பெண் போலீஸ் அதிகாரியை மக்கள் முன்னிலையில் வசைபாடியுள்ளார். அந்த வகையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ., சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முகமதாபாத் கோனா தொகுதி பாஜக எம்.எல்.ஏ., ஸ்ரீராம் சன்கார். இவர் சென்ற செவ்வாய்கிழமை, லக்னோ நகரில் தனது சொகுசுக் காரில் சென்றார். மாநில தலைமை செயலகத்திற்கு செல்ல, போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு வழிச்சாலை வழியாக அவர் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த ஊர்காவல் படை வீரர் அமித் சரின், அந்த காரை நிறுத்தி சுற்றிக் கொண்டு செல்லும்படி கூறினார். ஆனால்கா ரில் இருந்த எம்.எல்.ஏ., 'சுற்றி சென்றால் 3 கி.மீ. பயணிக்க வேணடும். 300 மீட்டர் தூரத்தில் உள்ள தலைமை செயலகத்திற்கு இந்த வழியில் தான் செல்வோம்' என கூறி வாக்குவாதம் செய்தார். அதோடு நிற்காமல் அவர், அந்த ஊர்காவல் படை வீரர் கன்னத்தில், பளாரென அறைந்தார்.
இது உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications