”டீயை பார்த்தால் பயம்”…அலறும் காங்கிரஸ் தலைவர்கள்.. சொல்கிறார் பாஜக எம்.பி.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் குடிப்பதையே நிறுத்தி விட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.
சமீபத்தில் பா.ஜ.க வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரசாரால் டீக்கடைக்காரர் என விமரிசிக்கப்பட்டார்.ஆனால்.அதனையே தங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு அடையாளமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர் பா.ஜ.கவினர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க எம்.பி சையது ஷாநாவாஸ் ஹுசைன் ,நரேந்திர மோடியின் மீது கொண்ட பயம் காரணமாக காங்கிரஸார் டீ குடிப்பதை விட்டு விட்டு காபிக்கு மாறிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் எப்போழுது டீ குடித்தாலும் அந்த கப்பில் மோடியின் முகமே தெரிகிறதாம் காங்கிரஸ் தலைவர்களுக்கு.அதனால் அவர்கள் காபிக்கு மாறிவிட்டனர் என கிண்டலாக விமர்சித்துள்ளார்.
காங்கிரசாரின் விமர்சனத்தையே நேர்மறையாக மாற்றி பிரச்சாரம் செய்யும் வகையில் பா.ஜ.கவினர் "நமோ டீ ஸ்டால்"என அங்கங்கே டீக்கடைகளை திறந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications