பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும்: பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் குசும்பு
டெல்லி: பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மிஸ்ட் கால் கொடுத்து உறுப்பினர்களை சேர்க்கும் பாஜகவின் திட்டம் இந்து அமைப்பான இந்து யுவ வாஹினிக்கு பிடித்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதாவது இந்து யுவ வாஹினி அமைப்பில் சேர விரும்புவோர் 07533007511 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில்,
இந்துத்துவத்தின் அடையாளம் பசு. அத்தகைய பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கர்வாப்சி எனப்படும் மதமாற்றத் திட்டத்திற்கு ஆதரவு அளித்து பேசினார் ஆதித்யநாத். பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் கௌரி-விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தற்போது பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications