For Daily Alerts
Just In
டெல்லியில் 2 நாள் பாஜக தேசிய செயற்குழு தொடங்கியது- 2,000 பேர் பங்கேற்பு!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2,000க்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் மாநில பாஜக தலைவர்கள், 1400 எம்.எல்.ஏக்கள், 337 எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
நாளைய கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அப்போது ஜிஎஸ்டி, கருப்பு பண மீட்பு விவகாரங்களில் மத்திய அரசு சாதித்தது எப்படி என்பது குறித்து பிரதம்ர் மோடி விவரிக்க உள்ளார்.
Comments
English summary
Prime Minister Narendra Modi is likely to dispel concerns over the state of economy and lay down his government’s economic and political agenda as a two- day Bharatiya Janata party national executive meeting begins in New Delhi on Sunday.
Story first published: Sunday, September 24, 2017, 15:08 [IST]