நாட்டிலேயே மதச்சார்பற்ற ஒரே கட்சின்னா அது பா.ஜ.க.தான்.. ராஜ்நாத்சிங் 'பொளேர்'
டெல்லி: இந்தியாவிலேயே மதச்சார்பற்ற ஒரே கட்சி பாரதிய ஜனதாதான் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் தோல்வி குறித்து ராஜ்நாத்சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பீகார் சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அமித்ஷா நீக்கப்படமாட்டார்.
பாரதிய ஜனதாவின் சட்டப்பிரிவுகள் படி அமித்ஷா 2 முறை கட்சியின் தலைவராக இருக்கலாம். மொத்தம் 6 ஆண்டுகாலம் அவர் கட்சித் தலைவராக இருக்கலாம். அதன் பின்னர் தலைவராக நீடிக்க முடியாது.
பீகார் தேர்தல் பிரசாரத்தில் மதவாத கருத்துகளை நாங்கள் பரப்பவில்லை. இந்த நாட்டிலேயே மதச்சார்பற்ற ஒரே கட்சி பா.ஜ.க.தான். தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றியும் பெற்றுள்ளது... தோல்வியையும் கண்டுள்ளது.
2014 லோக்சபா தேர்தலில் வென்ற பிறகு நடைபெற்ற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆகையால் பீகார் ஆணவத்தால்தான் பா.ஜ.க. தோற்றது என்பதை ஏற்க முடியாது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications