பாஜக ராஜ்யசபா எம்.பி நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா.. ஆம் ஆத்மியில் சேர திட்டம்
டெல்லி: ராஜ்யசபாவில் பாஜக நியமன எம்.பியாக பணியாற்றி வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்; அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் கிரிக்கெட் வீரரான பஞ்சாப்பை சேர்ந்த சித்து, தனது சிக்சர் விளாசும் பேட்டிங் ஸ்டைலை போலவே, அதிரடி பேச்சுக்கு சொந்தக்காரர். கிரிக்கெட் வர்ணையாளராகவும் உள்ளார்.

பாஜகவின் நீண்டகால உறுப்பினராக இருந்த சித்துவிற்கு ராஜ்யசபா நியமன எம்.பி பதவியை பரிசாக அளித்தது அக்கட்சி. இந்நிலையில், தனது எம்.பி பதவியை சித்து ராஜினாமா செய்துள்ளார். இதை ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்காக எம்.பி பதவியை சித்து, ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப்பில் பாஜக-ஷிரோன்மணி அகாலிதள ஆட்சி நடக்கிறது. 2012ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து, பாஜக சார்பில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் சித்து ராஜினாமா பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா போன்ற டெல்லியை ஒட்டிய மாநிலங்களில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications