டெல்லியில் தேர்தலைச் சந்திக்க தயார்: பாஜக
டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலைச் சந்திக்க தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னருக்கு ஜனாதிபதி அறிக்கை அனுப்பியுள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் தெரிவித்தது.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இதுகுறித்து கூறுகையில், "ஆம் ஆத்மி கூறுவதுபோல குதிரை பேரம் குறித்து கேள்வியெல்லாம் எழுப்பவில்லை.
டெல்லியில் எப்போது தேர்தல் நடந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம். அவ்வாறு நடக்கவுள்ள தேர்தலில் பா.ஜ.க முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும்" என்று தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலையில் டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில்,பா.ஜ.கவுக்கு 28 எம்.எல்.ஏக்களும்,ஆம் ஆத்மிக்கு 27எம்.எல்.ஏக்களும்,காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏக்களும் மற்றும் ஷிரோன்மனி அகாலி தல் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏவும் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications