முட்டி மோதிய லாலுவை நம்பாத பாஜக... நம்பிக்கைக்குரிய கூட்டணி தலைவராக மீண்டும் நிதிஷ்?
ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் பேரம் பேசிய லாலுவை நிராகரித்துவிட்டது பாஜக. இப்போது நிதிஷுடன் கை கோர்க்கிறது பாஜக.
பாட்னா: தமது குடும்பத்தினர் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக பாஜகவுடன் கை கோர்க்க லாலு பிரசாத் முயற்சித்து பார்த்தார்... ஆனால் லாலுவை நிராகரித்துவிட்டு எப்போதும் எங்களது நம்பிக்கைக்குரிய கூட்டணி தலைவர் நிதிஷ்குமார் என மீண்டும் பாஜக அரவணைக்கும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 17 ஆண்டுகள் இருந்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம். 2014 லோக்சபா தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து கூட்டணியை முறித்தார் நிதிஷ்.
அப்போது நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசுக்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் இதே மெகா கூட்டணி வென்று ஆட்சியை தக்க வைத்தது. லாலுவின் மகனுக்கு துணை முதல்வர் பதவி தந்து ஆட்சியில் அமர்ந்தார் நிதிஷ்குமார்.

பாஜகவுடன் பேரம் பேசிய லாலு
ஆனால் லாலு குடும்பத்தினர் மீதான வழக்குகளை டெல்லி மெல்ல தூசு தட்ட தொடங்கியது. உடனே லாலு பிரசாத் யாதவ், பாஜகவுடன் திரைமறைவு பேரத்தை தொடங்கினார். நிதிஷ்குமார் அரசைக் கவிழ்த்துவிட்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்பதுதான் அது.

லாலுவை ஏற்காத பாஜக
இதை பாரதிய ஜனதா கட்சி ஏற்கவில்லை. மாறாக லாலு குடும்பத்தினர் மீதான வழக்குகள் விஸ்வரூபமெடுத்தன. இதனால்தான் லாலுவின் மகன் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நெருக்கடி கொடுத்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்.

நிதிஷ்- லாலு கூட்டணி விரிசல்
இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிதிஷ்குமார் பகிரங்க ஆதரவு தெரிவித்தார். இது நிதிஷ்-லாலு கூட்டணியில் விரிசலை அதிகரித்தது.

நிதிஷ் ராஜினாமா
இதன் உச்சமாக இப்போது முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்திருக்கிறார். நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ள நிலையில் பாஜக வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடும். பீகாரில் அரசியல் காலச் சக்கரம் எப்போதும் நிதிஷ்குமாரை சுற்றித்தான் கடந்த 20 ஆண்டுகாலமாக ஓடிக் கொண்டே இருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications