காஷ்மீரில் பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை.. தீவிரவாதிகள் வெறிச்செயல்?
காஷ்மீரில் பாஜக கட்சியை சேர்ந்த மாநில செயலாளரும் அவரது சகோதரரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாஜக கட்சியை சேர்ந்த மாநில செயலாளரும் அவரது சகோதரரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. காஷ்மீர் மாநில பாஜக செயலாளர் அணில் பரிஹார் மற்றும் அவரது சகோதரர் அஜித் ஆகியோர் ஒன்றாக கடைக்கு சென்று இருக்கிறார்கள்.
மார்க்கெட்டில் நேற்று மாலை பொருட்களை வாங்கி கொண்டு திரும்பும் போது, முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்டு கும்பல் இவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
துப்பாக்கியால் இவர்களின் தலையில் சுட்டு இருக்கிறார்கள். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். இந்த நிலையில் அங்கு பாஜகவினர் இதற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.
[அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை.. சோதனையின்போதே நெஞ்சுவலியால் இறந்த அதிகாரி]
இந்த கொலைக்கு காரணம் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்புள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. அதேபோல் அரசியல் சார்ந்த கொலையாக கூட இது இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.