மாட்டுக்கறி சாப்பிடுவோம்னு சொல்லி சரண்டராகியும் ஓட்டு கிடைக்கலையே.. மேகாலயாவில் பரிதாப பாஜக!
மாட்டுக்கறி விவகாரத்தில் சரணடைந்தாலும் பாஜகவால் கணிசமான இடங்களை மேகாலயாவில் பெற முடியவில்லை
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற கனவில் 60 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாஜகவால் தற்போது வரை 6 இடங்களில்தான் வெல்ல முடிந்துள்ளது. இத்தனைக்கும் மாட்டுக்கறியையும் சாப்பிடுவோம்; மாட்டுக்கறிக்கு தடை விதிக்கமாட்டோம் என்றெல்லாம் பாஜக பிரசாரம் செய்தும் மேகாலயா வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா மாநில சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 60 இடங்களில் தனித்து போட்டியிட்டது. 2018-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 47 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது. ஆனால் அதிக இடங்களைப் பெற்ற என்பிபி கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியில் பங்கேற்றது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக என்பிபி கட்சி, பாஜக இடையேயான கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனித்துப் போட்டியிட்டது.

மேகாலயாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையான வாக்காளர்கள். இம்மாநிலத்தில் மாட்டிறைச்சி பிரதான உணவுகளில் ஒன்று. ஆனால் நாட்டின் பல பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனையை கடுமையாக எதிர்க்கிறது பாஜக. அக்கட்சி ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
மாட்டிறைச்சி விவகாரம் மேகாலயா சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தது. ஒருகட்டத்தில் மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னஸ் மாவ்ரி, மாட்டிறைச்சிக்கு ஆதரவாக பேசியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இது தொடர்பாக மாவ்ரி கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது பற்றி நான் பேச முடியாது. ஆனால் மாட்டிறைச்சி சாப்பிட பாஜக தடை விதிக்கவில்லை. நானும் மற்றவர்களைப் போல மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஒருவராலும் தடுக்க முடியாது. மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் தடை செய்யவும் முடியாது என்றார். மேலும் பாஜக, கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்பது பொய். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிக்கப்படவே இல்லை என்றும் மாவ்ரி கூறியிருந்தார்.

தற்போது மேகாலயா சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 60 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பாஜகவால் 6 இடங்களில்தான் முன்னிலை பெற முடிந்துள்ளது. பாஜகவின் மாட்டுக்கறி சரண்டர் அரசியல் அப்படி ஒன்றும் மேகாலாயாவில் கை கொடுக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்துகின்றன.
அதேநேரத்தில் மேகாலயாவில் என்பிபி கட்சி தனிப்பெரும் கட்சியாக 20க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் பெரும்பான்மைக்குரிய 31 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுடன் இணைந்துதான் என்பிபியால் மேகாலயாவில் ஆட்சி அமைக்க முடியும். ஆகையால் இம்முறையும் மேகாலயாவில் கூட்டணி ஆட்சியில் பாஜக ஒட்டிக் கொள்ளக் கூடும்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications