பீகாரில் சாதித்தது லாலு-நிதீஷ் கூட்டணி! 6 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவை வீழ்த்தியது!!
பாட்னா: பீகார் மாநிலத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்த கூட்டணி 6 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. பாஜகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே கிடடத்தன.
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாளம் மற்றும் காங்கிரஸ் இணைந்த கூட்டணி 6 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால் பாரதிய ஜனதாவோ 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
அண்மையில் முடிவடைந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பரம எதிரிகளாக இருந்த லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் இருவரும் கை கோர்த்து இந்த தேர்தலை எதிர்கொண்டனர். இருவரும் ஒரே மேடைகளில் ஏறி தேர்தல் பிரசாரமும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications