Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகாலயாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை.. கூட்டணி ஆட்சி அமைக்க என்பிபிக்கு பாஜக ஆதரவு

மேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அங்கு கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஷில்லாங்: மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை அமைந்த நிலையில் அதிக இடங்களில் வென்றுள்ள என்பிபி கட்சி ஆட்சியை அமைக்க பாஜக ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.

மேகாலயாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கான்ராட் சங்கமாவின் என்.பி.பி கட்சி மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 18 இல்தான் வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 21 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். இந்த நிலையில் கான்ராட் சங்மா புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாஜக, இதர உதிரி கட்சிகளுடன் இணைந்து ஆட்சிக்கு வந்தார்.

Meghalaya Assembly election results 2023: NPP will retain the power?

இந்த நிலையில் என்பிபி பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. இந்த 2023 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலில் என்பிபி கட்சி 57 தொகுதிகளிலும் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதற்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 74. 32 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம் மேகாலயா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் என்பிபி 26 இடங்களில் வென்றுள்ளது. அது போல் காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பாஜக வெறும் இரு இடங்களில் வென்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றுள்ளது, மற்ற கட்சிகள் 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அதிக தொகுதிகளில் வென்ற என்பிபி கட்சி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் முகமாக இருந்த முகுல் சங்மா கடந்த முறை அக்கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை அழைத்து கொண்டு திரிணமூல் காங்கிரஸில் ஐக்கியமாகினார். அதனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தும் பொறுப்பு அவருக்கு இருந்தது. இதனால் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த அவர் கடுமையாக போராடி வந்தார்.

எனினும் இந்த வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே தொங்கு சட்டசபை அமைந்தால் கூட்டணி அமைக்க தான் தயார் என்பதை என்பிபி தலைவர் கான்ராட் சங்மா தெரிவித்துவிட்டார்.

மேலும் நேற்று முன் தினம் கான்ராட் சங்மா அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை நேரில் சந்தித்து பேசினார். அது போல் அவரும் இன்று என்பிபி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். எனவே மேகாலயாவில் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் என்பிபி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டு அவர் காலமானதால் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+