பாஜகவுக்கு டெலிகேட் பொஷிசன்.. நாகாலாந்தில் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மணிப்பூரில் ஆட்சி கவிழும்?
நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மணிப்பூரில் பாஜக ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மணிப்பூரில் நாகாலாந்து மக்கள் முன்னணி, பாஜகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கினால் அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாகாலாந்தில் கடந்த 2013ம் ஆண்டு நாகாலாந்து மக்கள் முன்னணியுடன் பாஜக கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியை பிடித்தது. தற்போது 2018-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி நாகாலாந்து மக்கள் முன்னணியுடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து புதிய கட்சியான தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் (என்டிபிபி) இணைந்து பாஜக தேர்தலை சந்தித்தது. என்டிபிபியானது நாகாலாந்து மக்கள் முன்னணியில் அதிருப்தியாக இருந்தவர்கள் தொடங்கிய கட்சியாகும்.

பாஜக அரசு
இதனால் தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற கட்சியுடன் கூட்டணி வைத்தால் மணிப்பூரில் பாஜக அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று நாகாலாந்து மக்கள் முன்னணியினர் மிரட்டியுள்ளனர்.

ஆட்டம் கண்டுள்ள பாஜக
அதற்கேற்றவாறு இன்றைய நாகாலாந்து தேர்தல் முடிவுகளின்படி நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சி ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் பாஜக அரசு ஆட்டம் கண்டுள்ளது.

தனித்து போட்டி
கடந்த 2017-ஆம் ஆண்டு மணிப்பூரில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக, நாகாலாந்து மக்கள் முன்னணி, என்பிபி, லோக் ஜனசக்தி ஆகியன கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. காங்கிரஸ் மட்டும் தனித்து போட்டியிட்டது.

மொத்தம் 30 இடங்கள்
இந்த தேர்தலில் பாஜக 21 இடங்கள், என்பிபி- என்பிஎஃப்- தலா 4 இடங்கள், லோக் ஜனசக்தி- 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியினர் மொத்தம் 30 இடங்களை பெற்றனர்.

பாஜக பெரும்பான்மை இழக்கும்
ஆனால் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியோ 28 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது. இதனால் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது என்பிஎஃப் மிரட்டிய படி தனது ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டால் மொத்த 30 இடங்களில் 4 போய் விட்டால் 26 இடங்களே இருக்கும், இதனால் பாஜக பெரும்பான்மை இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சியில் தொடருமா
பாஜக ஆட்சியை இழக்குமா அல்லது மற்ற உதிரி கட்சிகளின் கூட்டணி வைத்து கொண்டு ஆட்சியில் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications