வாக்குச்சீட்டு முறையை அனைத்து கட்சிகளும் விரும்பினால் கொண்டு வர தயார்: பாஜக பொதுச்செயலாளர்
வாக்குச்சீட்டு முறையை அனைத்து கட்சிகளும் விரும்பினால் அதைக் கொண்டு வர தயார் என்று பாஜக பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
லக்னோ : வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர அனைத்துக் கட்சிகளும் விரும்பினால் அதைச் செயல்படுத்த பாஜக தயாராக உள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தேர்தலில் வாக்களிக்க வாக்குப்பதிவு இயந்திரங்களே பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில தேர்தல்களில் மிண்ணனு வாக்கு

உத்தரபிரதேசத்தில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போது பாஜக பெரும்வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. ஆனால் அதைத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
அதே சமயம், அம்மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலின் போதும், வடகிழக்கு மாநிலங்களின் தேர்தலின் போதும் இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகப், புகார் எழுந்ததை அடுத்து அந்த இயந்திரங்கள் மாற்றப்பட்டன.
இதுகுறித்து, இனி வரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நடந்து வரும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தேர்தல் முறையில் மக்கள் நம்பகத்தன்மை கொள்ளவேண்டுமெனில் வாக்குச்சீட்டு முறைதான் சிறந்தது என்றும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ்விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, வாக்குப்பதிவு இயந்திர முறையைக் கொண்டு வரும்போது அதை பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக்கொண்டதால் தான் அது நடைமுறைக்கு வந்தது.
தற்போது, எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்து, வாக்குச்சீட்டு முறையைக் கேட்கின்றன. அதை அனைவரும் விரும்பினால் மீண்டும் அதை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க பாஜக தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
-
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications