மேற்கு வங்கத்தில் சாதனை படைத்த பாஜக.. 1952க்குப் பிறகு அதிகபட்ச தொகுதிகளாக 4ல் வெற்றி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்று பாஜக புதிய சாதனை படைத்துள்ளது.
அங்கு கடந்த 1952ம் ஆண்டு பாரதிய ஜனசங்கம் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு அது அங்கு சோபிக்கவில்லை. தற்போது தான், 4 தொகுதிகளில் வெற்றி பெற்று அங்கு புதிய வரலாறு படைத்துள்ளது பாஜக.

மேற்கு வங்கத் தேர்தலில் பாஜகவுக்கு இது நிச்சயம் சந்தோஷமான முடிவு தான். இதற்கு முன்பு பாஜகவின் முன் உருவான பாரதிய ஜனசங்கம் 1952 தேர்தலில் 9 தொகுதிகளில் வென்றதே இந்த மாநிலத்தில் பாஜகவின் பெரிய சாதனையாக இருந்தது.
தற்போது வெற்றி பெற்றுள்ள நான்கு பாஜக வேட்பாளர்களில், மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷும் ஒருவர் ஆவார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டுதான் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் கியான்சிங் சோஹன்பாலை வீழ்த்தி வென்றுள்ளார் திலீப் கோஷ்.
பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் 10 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன. இது காங்கிரஸை விட 2 சதவீதமே குறைவாகும். இருப்பினும் கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது பாஜகவுக்கு 17 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 4.1 சதவீத வாக்குகளே கிடைத்திருந்தன என்பதால் இந்த 10 சதவீதம் என்பது நிச்சயம் மிகப் பெரிய லாபம்தான்.
2006 சட்டபைத் தேர்தலை திரினமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து பாஜக சந்தித்தது. அதில் ஒரு சீட்டில் கூட அது வெல்லவில்லை. மேலும் 1.9 தவீத வாக்குகளே கிடைத்தன. 2014 இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு சீட்டில் வெற்றி கிடைத்தது. தற்போது அது 4 இடங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications