முதல்வர்கள் மமதா, நவீன் பட்நாயக்கின் புகைப்படங்களை மார்பிங் செய்த பாஜக நிர்வாகி கைது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி முதல்வர்கள் மமதா பானர்ஜி மற்றும நவீன் பட்நாயக் ஆகியோரின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டதால் கைது செய்ப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்நாபூர் மாவட்டத்தில் உள்ள சோலா கிரமத்தை சேர்ந்தவர் பாபுயா கோஷ். பாஜக நிர்வாகியான அவர் மாநில தலைவர் திலிப் கோஷ் உள்ளிட்ட பலருடன் காணப்பட்டுள்ளார்.

அவர் மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரின் புகைப்படங்களை மார்பிங் செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
புகைப்படங்களை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, ஒரு ஆண் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் பைத்தியமாகிவிடுவார். ஆனால் ஒரு பெண் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் என்னவாகும் என்பதை மேற்கு வங்க மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இந்த போஸ்ட்டை பார்த்த உள்ளூர் மக்கள் கோஷ் மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோஷை கைது செய்தனர். மேலும் அவரின் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications