ம.பி. பாஜகவை ஜெயிக்க வைத்த சிவராஜ் சிங் சவுகான் நடுத்தெருவில் விரட்டியடிப்பு- முதல்வரான மோகன் யாதவ்!
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜகவின் முகமாக அறியப்பட்ட 3 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் நவம்பர் 17-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் கருத்து கணிப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி பாஜக 163 இடங்களில் அபார வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியோ வெறும் 66 இடங்களில்தான் வென்றது. இதனையடுத்து மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் வந்தது முதலே யார் அடுத்த முதல்வர் என்ற விவாதம் எழுந்தது. முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தமக்குதான் முதல்வர் பதவி கிடைக்கும் என உறுதியாக நம்பினார். அதைவிட தமக்குத்தான் பாஜக மேலிடம் முதல்வர் பதவியைத் தர வேன்டும் என விரும்பினார். இதனால் டெல்லி மேலிடம் அழைத்த போதும் அங்கு செல்ல மறுத்தார். அதே நேரத்தில் மத்திய பிரதேச முதல்வர் பதவிக்கு பலரும் முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் போபாலில் இன்று மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் யாதவ், மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ்.
சிவராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 3 முறை முதல்வராக இருந்து பாஜகவின் இமாலய வெற்றிக்குக் காரணமாக இருந்த சிவராஜ் சிங் சவுகானை பாஜக மேலிடம் புறக்கணித்தது தவறு என கோபத்துடன் கொந்தளிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications