பாகிஸ்தான் தொல்லையால் குஜராத்திலும் மின்வெட்டு..உஷார் நிலையில் பாதுகாப்பு படையினர்!எல்லையில் பதற்றம்
குஜராத்: இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாள் இரவாக ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் மாநிலங்களில் செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா சார்பாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தக்க பதிலடி வழங்கப்பட்டது. இதை அடுத்து தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது.

பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன்கள் மூலம் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களான காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள வான் வழி பாதுகாப்பு தொழில்நுட்பம் காரணமாக அனைத்து குண்டுகளும் அந்திரத்திலே வழிமறிக்கப்பட்டு இந்திய ராணுவம் அழித்து வருகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை ஒட்டி காஷ்மீர் முதல் குஜராத் வரை சேர்க்கை மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜம்மு, பதான்கோட், சாம்பா, ஜெய்சால்மர், பாரமர் உள்ளிட்ட பகுதிகளில் சேர்க்கையான மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதேபோன்று குஜராத்தில் உள்ள குச் பகுதியிலும் பாதுகாப்பு காரணங்களை ஒட்டி மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக குஜராத் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், எல்லையோர பகுதியான காண்ச் மாவட்ட முழுவதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், மறு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் இந்த தாக்குதல் காரணமாக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து பாகிஸ்தான் போடும் குண்டுகளை வானிலே இந்தியா அழித்து வெற்றியை கண்டு வருகிறது. இதன் காரணமாக இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications