பாதங்கள் கொப்பளித்து வெடித்து....ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வந்த மகாராஷ்டிரா விவசாயிகள்!
நாட்டுக்கே சோறு போடும் விவசாயி தனக்கான கோரிக்கைகளுக்காக 180 கிலோமீட்டர் தூரம் வெறுங்கால்களுடன் ரத்தம் வடிய நடந்து வந்த வேதனைக் காட்சிகள் நம் நாட்டில் விவசாயியின் நிலை எப்படி இருக்கிறது என்பதை தோலுரித
Recommended Video

மும்பை : நாட்டுக்கே சோறு போடும் விவசாயி தனக்கான கோரிக்கைகளுக்காக 180 கிலோமீட்டர் தூரம் வெறுங்கால்களுடன் ரத்தம் வடிய நடந்து வந்த வேதனைக் காட்சிகள் நம் நாட்டில் விவசாயியின் நிலை எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்து காட்டுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பேரணி சென்ற விவசாயிகளின் அவல நிலையை விளக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாதிய கிசான் சபா என்ற விவசாயிகள் அமைப்பு நாசிக் முதல் மும்பை வரை பிரம்மாண்ட பேரணியை நடத்தியது. சுமார் 30 ஆயிரம் விவசாயிகள் கையில் சிவப்பு கொடியேந்தி நடத்திய இந்தப் பேரணி சாலையில் செங்கடல் திரண்டு ஓடுவதைப் போன்று காட்சியளித்தது.
விவசாய நெருக்கடியாலும், இயற்கையால் ஏற்பட்ட அழிவினாலும் போராடிவரும் மஹாராஷ்டிரா விவசாயிகள், தங்களது கோரிக்கைகளாக கடந்த 2017 ஆம் ஆண்டில் முதல்வர் பத்னாவிஸ் அறிவித்தது போலவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேரணி நடத்தினர். இதனுடன் சுவாமிநாதன் கமிஷனையும் செயல்படுத்த வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை.
இந்தப் பேரணியில் பெண்கள், வயதானவர்கள் அதிலும் குறிப்பாக பழங்குடியின மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர். நாசிக் பகுதியில் மலைவாழ் மக்கள் வேளாண்மை செய்தாலும் நிலத்தின் உரிமையானது வனத்துறையிடமே உள்ளது. வனத்துறையினர் எப்போது வேண்டுமானலும் பயிர்களை அழித்து விடுகின்றனர் என்பதால் பழங்குடியின மக்களுக்கு விவசாய நிலங்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் பிரதான கோரிக்கை.
|
கால்கள் சொல்லும் வலிகள்
சுதந்திரம் அடைவதற்கு முன்னர் மக்கள் எப்படி அணியணியாக திரண்டு நடைபாதையாக சென்று போராடினார்களோஅது போல இருந்தது இந்த விவசாயிகள் பேரணியும். வெறும் கால்களுடனும், தேய்ந்த காலணிகளுடனும் ரத்தம் சொட்ட சொட்ட சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர்.
|
விவசாயியின் வாழ்க்கை இது தான்
சிறு காயம் என்றாலே துடித்துப் போகும் நமக்கு இந்த சிவந்த கால்களும், கொப்பளித்து வெடித்த பாதங்களும் அவர்களின் வலி என்ன என்பதை இந்த உலகிற்கே சொல்லும் ஒற்றை வரி செய்தி என்னவென்றால் நாட்டுக்கே சோறு போட்டாலும் எங்களின் வாழ்க்கை இவ்வளவு தான் என்பதாகவே இருக்கிறது.

விவசாயிகளின் 180 கி.மீ பயணம்
பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் இந்த விவசாயிகளின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. 10 கி.மீ, 50 கி. மீட்டர் அல்ல சுமார் 180 கிலோ மீட்டர் நடைபயணமாகவே வந்துள்ளனர் விவசாயிகள். மும்பையை கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் அடைந்த நிலையில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.

கோரிக்கைகள் ஏற்பு
ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதாக அரசு அறிவித்த நிலையில் பேரணி முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து 2 சிறப்பு ரயில்கள் மூலம் விவசாயிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications