கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாக். தீவிரவாதிகள்- நடுக்கடலில் நடந்தது என்ன?
டெல்லி: குஜராத் கடல் பகுதி வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற தீவிரவாதிகளை இந்திய கடற்படை தடுக்க முயன்றபோது, அவர்கள் பயணம் செய்து வந்த மீன் பிடி படகு வெடி வைத்து தகர்க்கப் பட்டது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
குஜராத் கடல்பகுதி வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்து வந்தது. இதன்படி கராச்சியில் இருந்து மீன்பிடிக் கப்பல் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் குஜராத் வழியாக இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைய இருப்பதாக இந்திய கடலோரக் காவல்படைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் கடலோரக் காவல்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது புத்தாண்டு அன்று அதிகாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் ஒன்று எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு:
அதனைத் தொடர்ந்து அந்த மீன்பிடிக் கப்பலை நோக்கி இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள் விரைந்து சென்றனர். இந்திய கடலோரக் காவற்படையினர் தங்களை நோக்கி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் வேகமாகத் தப்பிச் செல்ல முயன்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. இதனால் தப்பிச் செல்வது இயலாத காரியம் என முடிவு செய்த பாகிஸ்தான் மீன் பிடிக் கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக அதை வெடி வைத்து தகர்த்துள்ளனர். இச்சம்பவத்தின் மூலம், அக்கப்பலில் தீவிரவாதிகள் இருந்தது உறுதியானது.
வெடி வைத்து தகர்ப்பு:
குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதியில் 365 கி.மீ தூரத்தில் நடந்துள்ளது. வெடி வைத்து தகர்க்கப்பட்ட அந்த பாகிஸ்தான் மீன் பிடிக் கப்பலில் 4 தீவிரவாதிகள் இருந்துள்ளனர்.
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது மும்பை கடல் பாதை வழியாகத்தான் அவர்கள் வந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. எனவே மும்பை தாக்குதல் போன்ற சதி திட்டத்துடனேயே இம்முறையும் தீவிரவாதிகள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications