Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடகை கேட்ட ஹவுஸ் ஓனர் மீது சாம்பார் வீச்சு.. அதே சட்டியைப் பிடுங்கி திருப்பி ஊற்றிய ஹவுஸ் ஓனர்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூரில் வீட்டு வாடகையைக் கேட்ட வீட்டு உரிமையாளர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றியதாக பெண் உள்ளிட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சாம்பார் வீச்சில் வீட்டு உரிமையாளரும், அவரது ஊழியர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். முகம் பூராவும் அவர்களுக்கு வெந்து போய் விட்டது.

Boiling sambar thrown on house owner

பெங்களூரு ஹனமந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராம். இவர் ஒரு குடியிருப்பை சொந்தமாக வைத்துள்ளார். ஏராளமான வீடுகள் அதில் உள்ளன. அதில் ஒரு பகுதியை ஹேமலதா என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதை பேயிங் கெஸ்ட்டுக்காக வாடகைக்கு விட்டிருந்தார் ஹேமலதா. ஆனால் வாடகை கொடுக்காமல் சிவராமுக்கு சாக்குப் போக்கு சொல்லி வந்தார்.

இந்த நிலையில் நேற்று சிவராமும், அவரது கட்டடத்தில் வேலை பார்ப்பவரான சித்தராஜு என்பவரும் ஹேமலதாவிடம் போய் வாடகை கேட்டனர். அப்போது ஹேமலதாவுக்கும், வீ்ட்டு உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஹேமலதாவின் 22 வயது மகன் ஷ்ரேயாஸ் கோபமடைந்து அடுப்படிக்குப் போய் அங்கு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை எடுத்து வந்து சிவராம் மீது ஊற்றி விட்டார்.

இதில் அவர் அலறித் துடித்தார். ஆனாலும் விடாத சிவராம் அதே சாம்பார் சட்டியைப் பிடுங்கி ஷ்ரேயாஸ் மீது வீசினார். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. அவரும் அலறினார். இதுகுறித்து தகவல் அறிந்தும் போலீஸார் விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஹனுமந்த் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+