பாட்னா குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 6 ஆனது... பலியானவர் சதிகாரர் என போலீஸ் சந்தேகம்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பாட்னா குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தற்போது பலியானவர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய சதிகாரராக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

நேற்று பாட்னாவில் அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியானார்கள், காயமடைந்த 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பலியானவர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications