பிரதமர் பதவி... ராகுல் காந்தி மீது பெட் கட்டுவதை கைவிட்ட புக்கிகள்!
மும்பை: லோக்சபா தேர்தல் முடிவடையப் போகும் நிலையில் யார் அடுத்த பிரதமர் என்ற சூதாட்டமும் சூடு பிடித்துள்ளது.
அடுத்த பிரதமர் யார் என்ற சூதாட்டத்தில் இதுவரை ராகுல் காந்தியும் சூடான போட்டியில இருந்து வந்தார். தற்போது அவர் மீது பெட் கட்டுவதை புக்கிகள் நிறுத்தி வருகின்றனராம்.
ராஜ்கோட், இந்தூர், அகமதாபாத்தில் ராகுல் காந்தி மீது யாருமே இப்போது பெட் கட்டுவதில்லையாம். பிரதமர் பதவிக்கான போட்டியில் இப்போது ராகுல் காந்தி இல்லை. அவருக்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் புக்கிகள் கருதுகிறார்களாம்.

ஒரு மாதத்திற்கு முன்பு வரை
ஒரு மாதத்திற்கு முன்பு வரை கூட ராகுல் காந்தியின் பெயரை புக்கிகள் விரும்பி வந்தனர். ஆனால் தற்போது தேர்தல் முடிவடையப் போகும் நேரத்தில் புக்கிகளின் விருப்பப் பட்டியலிலிருந்து அவரை நீக்கியுள்ளனர்.

கெஜ்ரிவால் செல்வாக்கு ஓஹோ...
அதேசமயம், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து கிராக்கி நிலவுகிறது. அவரது பெயரில் ரூ. 500 முதல் ரூ. 525 வரை பெட் கட்டுகிறார்கள். ராகுலின் பெட் தொகை ரூ. 6-7 என்று அதல பாதாளத்திற்கு இறங்கி வந்து விட்டது.

முதலிடத்தில் தொடர்ந்து மோடி
பிரதமர் பதவிக்கான புக்கிகளின் பட்டியலில் மோடியே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலிடம்
அதேபோல அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற சூதாட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே கிராக்கி நிலவுகிறது. 2வது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி உள்ளது.

100க்குக் கீழ் காங். பெறும்..அதுக்கும் கிராக்கி
அதேபோல 100 சீட்களுக்கும் கீழாகவே காங்கிரஸ் பெறும் என்றும் பெருமளவிலானோர் பெட் கட்டுகிறார்களாம்.












Click it and Unblock the Notifications