இன்று முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு.. டிச.31 வரை சலுகை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வசூலிக்கப்பட்ட சேவை கட்டணம் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9ம் தேதி முதல் ரூ.500 , ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. எனவே, நாட்டில் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உள்ளதால், பணமற்ற பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு சேவைக்கட்டணம் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என்று ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலமாக செய்யப்படும் புக்கிங்களுக்கு 2ம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுக்கு ரூ.20ம், குளிர்சாதன படுக்கை வசதி டிக்கெட்டுக்கு ரூ.40ம் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது .












Click it and Unblock the Notifications