For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் பயங்கரம்.. பிச்சை போட மறுத்த இளைஞரை பீர் பாட்டிலால் குத்தி கொன்ற சிறுவர்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பிச்சை போட மறுத்த இளைஞரை சிறுவர்கள் இருவர் பீர்பாட்டிலால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு டெல்லியில் கோவிந்த்புரி பகுதியில் உள்ள கால்காஜி கோவிலில் பூ வியாபாரம் செய்து வந்தவர் சஞ்சய் குமார். அவரிடம் 9 மற்றும் 10 வயதுள்ள இரு சிறுவர்கள் பிச்சை கேட்டுள்ளனர்.

ஆனால் சஞ்சய் குமார் அவர்களுக்கு காசு கொடுக்க மறுத்துள்ளார். இதனால் சஞ்சய் குமாருடன் அந்த சிறுவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Boys kill man with beer bottle in delhi

இந்த வாக்குவாதம் முற்றியதில் ஒரு சிறுவனின் கன்னத்தில் சஞ்சய்குமார் அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவன் அங்கிருந்த பீர் பாட்டிலால் சஞ்சய் குமாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளான்.

இதில் நிலை குலைந்து விழுந்த சஞ்சய்குமாரின் மார்பு மீறி ஏறி அமர்ந்த மற்றொரு சிறுவன் உடைந்த பீர் பாட்டிலால் அவரது கழுத்தில் சமாரியாக குத்தினான்.

இது குறித்து தகவல் அறிந்த கோவிந்த்புரி போலீசார் பாட்டிலால் குத்தப்பட்ட சஞ்சய்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சஞ்சய் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே நேரத்தில் இளைஞரை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்த பின்னர் தப்பி ஓடாமல் அதே கால்காஜி கோவில் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அந்த சிறுவர்கள் இருவரையும் பிடித்த போலீசார் சிறுவர் கைது செய்து சீர்திருத்த மையத்தில் அடைத்தனர்.

English summary
23-year-old youth by slitting his throat with a broken beer bottle by 9, 10 years boys following an argument in Govindpuri area of southeast Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X