கேமிங் கோட்.. பேஸ்புக் கணக்கு.. பிரமோஸ் விவரங்களை பாகிஸ்தானுக்கு அளித்த உளவாளி.. திடுக் பின்னணி!
பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி எப்படி பிரமோஸ் விவரங்களை பாகிஸ்தானிற்கு அளித்தான் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
டெல்லி: பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி எப்படி பிரமோஸ் விவரங்களை பாகிஸ்தானிற்கு அளித்தான் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
கேம் விளையாடும் கோட்கள் மூலம் இந்த தகவல்கள் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பேஸ்புக்கில் இதற்காக பல போலி கணக்குகளும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் இவன் எப்படி கைது செய்யப்பட்டான் என்று தீவிரவாதி எதிர்ப்பு படை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இவனை பாதுகாப்பு படையினர் பொறிவைத்து பிடித்து இருக்கிறார்கள்.
[ சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றச்சாட்டு.. மலேசியாவில் 126 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது ]

கைது செய்யப்பட்டான்
பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டு
இருக்கிறான். இவன் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இயங்கி வந்த டிஆர்டிஓவின் பிரமோஸ் குழுவில் பணியாற்றி வந்துள்ளான். இவன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிஷாந்த் அகர்வால் என்று இவன் தன்னுடைய பெயரை அளித்துள்ளான்.

எப்படி பிடித்தனர் இவனை
கடந்த சில மாதங்களுக்கு முன் அச்சுதானந்த் மிஸ்ரா என்ற பாதுகாப்பு படை அதிகாரி கைது செய்யப்பட்டான். இவன் பாகிஸ்தான் உளவாளி என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இவன் கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே பிரமோஸில் பணியாற்றிய இன்னொரு உளவாளியான நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளான்.

எப்படி அளித்தான்
இவன் ஆன்லைன் கேம்கள் மூலம் திருடப்பட்ட தகவல்களை அளித்துள்ளான். ஆம், ஆன்லைன் கேம் ஒன்றில் (இதன் விவரம் வெளியாகவில்லை) கோட்களை மறைத்து என்கிரிப்ட் செய்து அதை அனுப்பி உள்ளான். பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ அமைப்பு அந்த கோட்களை டி-கிரிப்ட் செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கில்லாடி
இவன் மஹாராஷ்டிராவை சேர்ந்தவன் என்று தன்னுடைய விவரங்களை அளித்து இருக்கிறான். இவன் படித்த கல்லூரி, ஊர், விவரம் என அனைத்தும் பொய்யானது என்ற கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இவன் நான்கு வருடமாக பிரமோஸ் குழுவில் பணியாற்றி உள்ளான். நான்கு வருடமாக சிறிய சிறிய விஷயங்களை கூட இவன் தனது உளவு படையான ஐஎஸ்ஐக்கு அனுப்பி உள்ளான்.

பேஸ்புக் பொய் கணக்கு
அதேபோல் இவன் பேஸ்புக்கிலும் பொய்யான கணக்குகள் இரண்டு வைத்துள்ளான். இதை வைத்து மற்ற பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரமோஸில் வேலை பார்ப்பதாக கூறி பேசி வந்துள்ளான். அவர்களிடமும் சில முக்கியமான தகவல்களை இவன் கறந்து பாகிஸ்தானிற்கு அனுப்பி இருக்கிறான்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications