தேர்தல் நடத்த பாதுகாப்பு இல்லை.. இனி காஷ்மீரில் என்ன குடியரசு தலைவர் ஆட்சியா?
ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடத்துவதற்கு ஏற்று பாதுகாப்பு தற்போது இல்லை என்பதால், இன்னும் சில மாதங்களுக்கு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடத்துவதற்கு ஏற்று பாதுகாப்பு தற்போது இல்லை என்பதால், இன்னும் சில மாதங்களுக்கு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி முறிந்துள்ளது. பிடிபி கட்சிக்கு பாஜக கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது.

பல்வேறு காரணங்களால் அங்கு ஆட்சி கலைந்து இருக்கிறது. அங்கு காங்கிரஸ், என்சிபி, பிடிபி கூட்டணியும் பெரிய அளவில் உருவாக்கி வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சி, பிடிபி ஆட்சி கவிழ்ந்ததில் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு அங்கு ஆளுநர் ஆட்சிதான் . தேர்தல் நடக்கும் வரை அங்கு ஆளுநர் ஆட்சிதான் நடக்கும்.
ஆனால் தேர்தல் இப்போதைக்கு நடக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. அங்கு தேர்தல் நடத்தும் வகையில் போதுமான பாதுகாப்பு இல்லை. வரிசையாக தீவிரவாத தாக்குதல் நடப்பதால், இப்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது. இதனால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசு தலைவர் தேர்தல் வரும் பட்சத்தில் பல மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சியே அங்கு நீடிக்கவும் வாய்ப்புள்ளது. இது அங்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications