துரத்தும் "அகால மரணங்கள்" அன்று பிரமோத் மகாஜன்.. இன்று மைத்துனர் கோபிநாத் முண்டே
டெல்லி: பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான பிரமோத் மகாஜன் தமது சகோதரரால் சுடப்பட்டு சிகிச்சை பெற்றபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அகால மரணடைந்தார். தற்போது அவரது மைத்துனர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அகால மரணமடைந்துள்ளது அவர்கள் குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பிரமோத் மகாஜன். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மகாஜன், 1996ஆம் ஆண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். பின்னர் பிரதமர் வாஜ்பாயின் ஆலோசகராக இருந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

குடும்ப விவகாரத்தில் சகோதரர் பிரவீன் மகாஜனால் 2006ஆம் ஆண்டு பிரமோத் மகாஜன் சுடப்பட்டார். இதைத் தொடர்ந்து 13 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார் பிரமோத் மகாஜன். ஆனால் சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட பிரமோத் மகாஜன் அகால மரணடைந்தார்.
மைத்துனர் கோபிநாத் முண்டே
பிரமோத் மகாஜனின் சகோதரி பிரண்யாவின் கணர்வதான் கோபிநாத் முண்டே. மகாராஷ்டிரா மாநில அரசியலில் கோலோச்சிக் கொண்டிருந்தவர். அம்மாநில துணை முதல்வராகவும் பதவி வகித்தவர். தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை டெல்லியில் சாலை விபத்தில் சிக்கிய கோபிநாத் முண்டே சிகிச்சைக்காக டெல்லி எய்எம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையின் போது மகாஜனுக்கு ஏற்பட்டதைப் போலவே மாரடைப்பு ஏற்பட சிகிச்சை பலனின்றி கோபிநாத் முண்டே உயிரிழந்தார்.
அன்று பிரமோத் மகாஜனைப் போல அவரது மைத்துனர் கோபிநாத் முண்டேவும் அகால மரணமடைந்துள்ளது அக்குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications