ஆன்லைன் மூலம் வாங்கப்படும் உணவு வகைகளில் எதற்கு முதலிடம் தெரியுமா?
ஆன்லைன் மூலம் வாங்கப்படும் உணவு வகைகளில் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது.
டெல்லி: ஆன்லைன் மூலம் உணவு பொருள்களை ஆர்டர் செய்யும் பட்டியலில் அதிக ஆர்டர் செய்யும் பொருளாக பிரியாணி விளங்குகிறது.
ஸ்விக்கி என்ற ஆன்லைன் உணவு டெலிவரி தளம் 2017 ஆனது ஆன்லைன் மூலம் உணவு பொருள்களை ஆர்டர் செய்யும் பட்டியலில் அதிகமாக ஆர்டர் செய்யும்
உணவு பொருள்கள் என்ன என்பதை ஆய்வு நடத்தியது.
மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, புனே, கொல்கத்தா ஆகிய 7 நகரங்களில் இந்த ஆய்வை அந்த நிறுவனம் நடத்தியது.
பட்டியலில் டாப் 5 எது
அதிகம் பேர் விரும்பி ஆர்டர் செய்யும் உணவு வகைகளில் மசாலா தோசை, பட்டர் நான், தந்தூரி ரொட்டி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா ஆகிய 4 உணவு பொருள்கள் முன்னிலையில் அதுவும் 2-ஆம் இடத்திலிருந்து அடுத்தடுத்து உள்ளன.
பிரியாணிக்கு எந்த இடம்
இந்த சர்வேயில் இந்தியாவில் அதிகம் பேர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் உணவு பொருளாக அதிக வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தை பெற்றது. அதிலும் சிக்கன் பிரியாணிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.
பீசா இல்லை
முதல் 5 இடங்களில் பீசாவுக்கு இடம் இல்லை. இந்த உணவு மிகவும் தேடப்பட்ட உணவாகியுள்ளது. இந்தியர்கள் பீசா உணவை 5 லட்சம் முறை தேடியுள்ளனர். ஸ்னாக்ஸ்களாக சிக்கன் ரோல், பிரென்ஞ் பிரைஸ், பாவ் பாஜி, சமோசா, பேல் பூரி ஆகியவை உள்ளன.
பர்கர்
பீசாவுக்கு அடுத்தபடியாக பர்கர், கேக், மேமோஸ் ஆகியன உள்ளன. டிசம்பர் 3-ஆம் தேதி அதிகம் பேர் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். இந்த ஆய்வில் நள்ளிரவுகளில் ஆர்டர் செய்யப்படும் உணவு, ஸ்னாக்ஸ் உணவு, வருங்காலத்தின் பிரபல உணவுகள், ஆரோக்கிய உணவுகள் என்ற பிரிவுகளில் அறிக்கை வெளியிடப்பட்டது.
லஞ்ச் என்ன
இந்திய உணவுகளில் மசால் தோசை, இட்லி மற்றும் வடை ஆகியன காலை சிற்றுண்டிகளாக பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அவர்கள் பிரியாணி, சிக்கன் மற்றும் மட்டன், வெஜ் ஆகியவற்றையும் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் பன்னீர் பட்டர் மசாலா மற்றும் மசாலா தோசை, தால் மக்கானி, சிக்கன் பிரைடு ரைஸ் ஆகியனவும் அதிகம் பேர் விரும்பி சாப்பிடும் உணவுகளாக உள்ளனர்.