இங்கே நாம் வீண் விவாதங்களில் ஈடுபட்டிருக்கும்போது.. அங்கே யோகி ஆதித்யநாத்தின் தம்பி சீன எல்லையில்!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியாநாத்தின் உடன்பிறந்த சகோதரர் இந்திய ராணுவத்தில் வேலை செய்து வருகிறார்.
டெல்லி: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியாநாத்தின் சகோதரர் இந்திய ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். சீன எல்லையில் ராணுவ வீரராக இருக்கும் இவரது பெயர் சுபேந்தர் சைலேந்தர் மோகன் என்பதாகும். இவர் யோகி ஆதித்தியாநாத்தின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
உத்தரபிரதேசத்தின் முதல்வராக சில மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார் யோகி ஆதித்தியாநாத். யாரும் எதிர் பார்க்காத வகையில் இவர் திடீர் என்று பதவி ஏற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவர் சகோதரரின் வேலை இந்திய மக்களை இன்னமும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

யோகி ஆதித்தியாநாத்தின் சகோதரர் சுபேந்தர் சைலேந்தர் மோகன் இந்திய ராணுவத்தில் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் யோகி ஆதித்யாநாத்தின் உடன்பிறந்த சகோதரர் ஆவார். இந்த விஷயம் தற்போது வெளியே தெரிந்துள்ளதை அடுத்து அவர் நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆகியிருக்கிறார்.
இந்திய- சீன எல்லையில் பணியில் இருந்த சுபேந்தர் சைலேந்தர் மோகனை வரிசையாக நிறைய பேர் பேட்டி எடுத்து வருகின்றனர். அதன்படி சுபேந்தர் சைலேந்தர் மோகன் பேட்டிகளில் கூறியதாவது "இந்திய-சீன எல்லையில் தான் நான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றேன். எனக்கு இதுதான் வீடு இதை நான் பாதுகாப்பேன். என்னுடைய சகோதரர் யோகி ஆதித்யாநாத் நாட்டுக்கு சேவை செய்து வருகிறார். அதே போல் நானும் சேவை செய்து வருகிறேன்." என்று கூறியிருக்கிறார்.
மேலும் யோகி குறித்த கேள்விகளுக்கு அவர் கூறியதாவது "யோகி ஆதித்யாநாத்தை முதல்வர் ஆன பின் ஒரே ஒரு முறைதான் டெல்லியில் பார்த்தேன். அவர் என்னிடம் நாட்டிற்கு உன்னால் முடிந்த சேவையை செய் என்று கூறியிருக்கிறார். அதைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன். ஒரு ராணுவ வீரனாக இருப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications