தங்கையின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற கொடூர அண்ணன்கள்
பரேலி: உத்தர பிரதேசத்தில் உறவினர் ஒருவரை காதலித்த 17 வயது தங்கையின் தலையை துண்டித்த சகோதரர்கள் அதை எடுத்துக் கொண்டு ஊர் முழுவதும் ஊர்வலம் சென்றுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள பாமனி சவ்கி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களான குல் ஹஸன்(25), நான்ஹி மியான்(20). அவர்களின் தங்கை ஃபூல் ஜஹான்(17) உறவினர் முகமது அச்சானை காதலித்து வந்துள்ளார்.

முகமதை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாக ஜஹானுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபம் அடைந்த ஜஹான் வீட்டை விட்டு வெளியேறி முகமதுவின் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் முகமதுவின் வீட்டிற்கு சென்று ஜஹானை அடித்து, கத்தியால் குத்தி பின்னர் அவரின் தலையை துண்டித்தனர்.
பிறகு அவர்கள் துண்டிக்கப்பட்ட தலையுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்றுள்ளனர். யார் காதலித்தாலும் இந்த கதி தான். இந்த காரியத்தை செய்ததற்காக நாங்கள் வருத்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்னர். சகோதரர்கள் ஊரை விட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications