10 கிலோ ஹெராயினுடன் பாகிஸ்தானிலிருந்து ஊடுறுவிய 4 கடத்தல்காரர்களை சுட்டுக் கொலை
பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடத்தல்காரர்கள் 4 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்த 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செக்டரில் உள்ள மெஹந்திபூர் எல்லை சோதனைச் சாவடி அருகே யாரோ நடமாடுவது போன்று இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போதைப் பொருளுடன் வந்த 4 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை 4.40 மணிக்கு சுட்டுக் கொன்றனர்.

அதில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், இருவர் இந்தியர்கள். பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்களில் ஒருவர் திரும்பிச் சென்றுவிட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை என்று எல்லை பாதுகாப்பு படையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தாப்பா தெரிவித்துள்ளார்.
அந்த நான்கு பேர் வைத்திருந்த 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டதில் காயம் அடைந்த பாகிஸ்தானியர் ஒருவர் அவரது நாட்டிற்கே திரும்பிச் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications