நிதின் கட்கரி வீட்டில் ஒட்டு கேட்பு கருவி.. பாஜக விளக்கமளிக்க மன்மோகன் சிங் கோரிக்கை
டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டில் ஒட்டுக் கேட்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான நிதின் கட்கரியின் வீட்டில், ஒட்டுக்கேட்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப் பட்டதாக நேற்று ஊடகங்களில் வெளியான செய்தி பரபரப்பை உண்டாக்கியது.

சொந்த அமைச்சர்களையே நம்பாமல் பாஜக வேவு பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், ஒட்டு கேட்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் ஊடகங்களின் யூகம் என மறுப்புத் தெரிவித்தார் நிதின் கட்கரி.
ஆனபோதும், இந்த மறுப்பை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக பாஜக விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
நேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அளித்த இப்தார் விருந்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக பாஜக நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ‘அமைச்சர் வீடுகளே இவ்வாறு ஒட்டுக் கேட்கப்படுவது விரும்பத்தக்க செயல் அல்ல. எனவே, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். எப்படி இவ்வாறு நடந்தது என்பதை நாடாளுமன்றத்தில் பாஜக விளக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications