ஜல்லிக்கட்டுப் போட்டி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: ஜல்லிக்கட்டை முறைப்படுத்த பல நெறிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும் விதிகள் மீறப்படுகின்றன என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை முழுமையாக தடை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்நிலையில் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காளைகளுக்கு எந்த துன்புறுத்தலும் இன்றி ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்றார்.
அப்போது, ஜல்லிக்கட்டை முறைப்படுத்த பல நெறிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும் விதிகள் மீறப்படுகின்றன என்று கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், பொழுதுபோக்கு விலங்கு பட்டியலில் காளையை நீக்க மத்திய அரசு முடிவு எடுத்ததற்கும் அதிருப்தி தெரிவித்ததோடு, நீதிமன்றத்தை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு முடிவெடுத்தது ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications