ஆந்திரா ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்ட பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
ஹைதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி எதிர்க்கட்சிகள் நடந்த பந்த்தால் அம்மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் தமிழக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் இன்று போக்குவரத்து சீரடைந்தது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு ஓராண்டு கடந்து விட்ட நிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை வலியுறுத்தி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு ஆகிய எதிர்க்கட்சிகள், நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன.
அதன்படி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சென்னை கோயம்பேட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதி, ஸ்ரீகாள்கஸ்தி, நெல்லூர், ஸ்ரீஹரிகோட்டா, தடா மற்றும் சூளூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி தமிழக- ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம் பாக்கத்திலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் பயணிகளை ஆரம்பாக்கத்தில் இறக்கி விட்டு தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் மீண்டும் சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு திரும்பினர். இந்நிலையில் மீண்டும் இன்று போக்குவரத்து சீரடைந்தது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications