தெலுங்கானா, உ.பி.யில் 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
ஹைதராபாத்: தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் இருக்கும் பாலேரு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம்ரெட்டி வெங்கட் ரெட்டி கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து பாலேரு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் 13 பேர் போட்டியிட்டுள்ளனர். இருப்பினும் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இரண்டு தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கனுபாரி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் கனுபாரி இடைத்தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications