பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு.. உத்தரகாண்ட், கோவாவில் இழுபறி - சி வோட்டர் எக்ஸிட் போல்
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று சி வோட்டர் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 59 முதல் 67 இடங்களைக் கைப்பற்றும் என்று சி வோட்டர் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சி இடையே சம போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற உள்ளது. எக்ஸிட் போல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி 59 முதல் 67 இடங்களைக் கைப்பற்றும் என்று சி வோட்டர் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
பாஜக மரண அடி
பாஞ்சாப் மாநிலத்தில் ஆளும் அகாலிதளம் பாஜக 5 முதல் 13 இடங்களையை பிடிக்கும் என்று சி வோட்டர் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது. ஜீரோ முதல் 3 இடங்களையே கைப்பற்றும் என்றும் சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
உத்தகாண்டில் பாஜக - காங்கிரஸ்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள 70 இடங்களில் இரு கட்சிகளுமே 29 முதல் 35 இடங்களைக் கைப்பற்றும் என்றும் சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. பிற கட்சிகள் 2 முதல் 9 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளன.
கோவா
கோவா மாநிலத்தில் பாஜக போராடி வெல்லும் என்றும் சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 15 முதல் 21 இடங்களைக் கைப்பற்றும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சி 12 முதல் 18 இடங்களில் வெல்லும் என்று சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 முதல் 8 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அந்த எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications